Friday, October 7, 2011

மாற்றுமததவர்களை திருமணம் செய்யலாமா ?


ஆண்களும் -பெண்களுக்கும் பொதுவான கட்டுரை
ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.

அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது.

அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.

இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.

திருமண வாழ்க்கை என்பது சந்தோஷி்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3)என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ(இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது.  ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து
இதயம் நுழையும் காதல்
உயிரில் கலந்த
உறவாக ஆக வேண்டுமானால்
அது உயர்வான இறைவனின்
வழிகாட்டுதலில் வந்தால்தான் வாழ்நாள் முழுவதும் இனிக்கும்.

நீங்கள் விரும்பும் ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

முடியாத பட்சத்தில், நம் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் நமக்கு மேல்.

2 comments:

  1. وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ(இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)..


    மேலே உள்ள வசனங்கள் மூமினாக பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்றும் இஸ்லாம் தை ஏற்று அதன்படி வாழ ஆசபடுவர்களுக்காக குரான் இல் குறிபிடப்பட்டுள்ளது என்று நான் புரிந்து.கொண்டிருக்கிறேன்
    ஆனால் இதை மூமிஇன் பெற்றோர்கள் இதை ஏற்க தயாராக உள்ளார்களா ?

    காதல் ஏன்றால் காமம் என்று இஸ்லாம் கூறுகிறது என்று கூறுகிறீர்கள் ... அதை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று விளங்கி இஸ்லாத்த்ஹை ஏற்று இன்று

    அந்த பெண்ணை விட இஸ்லாம் தை நேசிக்க ஆரம்பித்து ஒரு மூமினாக அல்லாவிடம் எனக்கு அனுமதி கிடைத்தாலும் பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுகொள்ள தயாராக இல்லையே ?
    இதற்கு உங்கல் விளக்கம் என்ன ?

    கவரவம் என்னும் சொல்லுக்கு -
    அல்லாஹ்வின் மீது உள்ள பயமும் பொய் விடுகிறது ( பெண்ணை மனசு மாறி வர சொல்கிறார்கள், களங்கமுள்ள மனசோடு உள்ள பெண்ணை வேறொரு ஆணுக்கு கட்டி கொடுக்க தயாராக உள்ளார்கள் இப்படி தன செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறதா ? அல்லாஹ் இதை எப்படி தான் செய்ய வேண்டும் என்று கூறிகிறான ?
    குரான் இல் உள்ள இந்த ஒரு வசனத்தை மட்டும் நம்ப தயாராக இல்லையே ?

    மனசார சரியான காரணத்தை சொல்லி பின்னால் இஸ்லாம் ஐ ஏற்றாலும் ( என்னுடைய வாழ்வில் நடந்தது ). இன்று எனக்கு நான் ஆசை பட்ட பெண்ணோடு வாழ இன்னும் போராடி கொண்டிருகிறேன் கடந்த மூன்று வருடங்களாக .....
    இஸ்லாம் வழியில் அழகாக குடும்பம் நடத்த வேண்டும் ஏன்று இன்று வரை போராடுகிறேன்.
    பெண்ணுக்காக இபொழுது நான் வர வில்லை ... ஆனால் எந்த பெண் நான் இஸ்லாம் கு வருவதற்கு கேட் ஆக ( மூலதனமாக , காரணமாக ) இருந்தார்களோ அவர்களை திருமணம் செய்வது ஆசை படுவது தவறா ?என்னை போல் என்னொரு இளைஞன் க்கு இப்படி ஒரு கஷ்டம் வராம இருக்கணும் அதற்கு ஒரு நல்ல முடிவை யோசித்து வரும் காலங்களில் தெரிவியுங்கள்...
    என்னை போன்று மாற்று மத இளைங்கர்களுக்கு என்ன பதில் தருவீர்கல் ?
    அல்லாஹ்வை ஏற்று கொண்டதனனால் நல்லது நடக்கும் என்று சொலு வீர்களா ? இல்லையென்றால் எனக்க நீங்களும் துஆ செய்ய போறோம் என்று சொல்ல போரிர்களா ?
    மன்னிக்கவும் தவறு இருந்தால்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் ... சகோதரே தங்களின் கருத்தை வெளிபடுத்தியதற்க்கு நன்றி... உங்களது கருத்தில் எழுத்து பிழை காரணமாக சிலவற்றை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் .. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஓர் அளவிற்கு புரிந்துகொண்டேன்...

    முதலில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள்..

    நீங்கள் நிரந்தர நரகத்தை விட்டு பாதுகாப்பு பெற்றுவிட்டீர்கள் ... எல்லா புகழும் இறைவனுக்கே..

    இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு பெண்ணோ , ஆணோ வேற்று கொள்கைகளை கொண்ட மதத்தை உடையவர்களை திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கட்டளை ...

    கட்டளையை மீறி மணந்துகொண்டால் அவர்கள் இஸ்லாத்தை புறக்கணித்து விட்டார்கள் என்று அர்த்தம்..

    அதே சமயம் ஒரு ஆணோ , பெண்ணோ வேற்று மாதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்து , இஸ்லாமியர்களை திருமணம் செய்துகொள்ள ஆசைபட்டால் இஸ்லாம் அதற்க்கு தடை போடவில்லை ..

    உங்களது பிரச்சனை என்ன என்பது நமக்கு சரியாக விளங்க வில்லை .. நீங்கள் விரும்பும் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தீர்கள் ஆனாலும் அவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய பெண்ணை மணமுடித்து வைக்க மறுக்கிறார்கள் என்கிறீர் சரியா நான் சொல்வது ?

    இதற்க்கு இஸ்லாம் குறுக்க நிற்கவில்லை .. அந்த பெண்ணின் பெற்றோர்கள் தான் நிற்கிறார்கள்.

    இதற்க்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..

    உதவி தேவைபட்டால் சொல்லுங்கள் ...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன